ஏழ்மை, ஊழலை கல்வியால் மட்டுமே ஒழிக்க முடியும்

ஏழ்மை, ஊழலை கல்வியால் மட்டுமே ஒழிக்க முடியும்: கல்லூரி விழாவில் அப்துல் கலாம் பேச்சு பெங்களூர், ஏழ்மை, ஊழலை கல்வியால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். தும்கூர் சித்தகங்கா தொழில்நுட்ப கல்லூரி பொன் விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசும்போது கூறியதாவது:– ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் ஏழ்மை, ஊழலை அறவே ஒழிக்க வேண்டியது அவசியம். இந்த ஏழ்மை, ஊழலை கல்வியால் மட்டுமே ஒழிக்க முடியும். அதனால் ஒவ்வொருவரும் கல்வியாளராக வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். இந்தியா கிராமங்களின் நாடு. விவசாயிகள் அதிகம் வசிக்கிறார்கள். கிராமப்புற குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும். அதன் மூலம் நாடு, மாநிலம் மற்றும் பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும். மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் தங்களின் அறிவு தானாகவே வளரும். நாம் எந்த ஒரு பணியையும் செய்யும்போது தன்னம்பிக்கை மிக முக்கியமாகும். வெற்றி நிச்சயம் தன்னம்பிக்கையுடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம். என்ஜினீயரிங் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்நுட்ப பயிற்சி இருக்க வேண்டும். அரசுகள் செய்யாத பணிகளை இந்த சித்தகங்கா மடம் செய்து வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு இந்த கல்லூரியில் முக்கியத்துவம் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 106 வயதிலும் சிவகுமார சாமி மாநிலம் முழுவதும் சுற்றி மக்களை சந்திக்கிறார். கல்வி நிறுவனங்களை சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார். இது உங்களுக்கு கிடைத்த பாக்கியம். இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: