27.7.11

ஈவ் டீசிங்: பிளஸ்-2 மாணவி தற்கொலை: 2 மாணவர்கள் தலைமறைவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஈவ் டீசிங் கொடுமையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அயன்குருவிதுறையை சேர்ந்தவர் டெய்லர் மணியின் மகள் அபிராமி (17). இவர் அருகில் உள்ள அய்யப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

அபிராமி பள்ளிக்கு செல்லும்போது கல்லூரி மாணவரான கோபி (19), கண்ணன் (17) ஆகியோர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது.

நேற்று காலை அபிராமி பள்ளிக்கூடம் சென்றபோது கோபியும் கண்ணனும் வழிமறித்து ஆபாசமாகப் பேசியுள்ளனர். உன்னைப் பற்றி சுவற்றில் ஆபாசமாக எழுதுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் வெறுத்துப் போன அபிராமி வீட்டுக்கு வந்து அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு, தூக்கு போட்டுக் கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்தார்.

இதையடுத்து கோபி, கண்ணன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Read more...

சென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெடிகுண்டு சிக்கியது

சென்னை: சென்னையில், நகைப்பட்டறை நடத்தியவர் வீட்டு மொட்டைமாடியில், பிளாஸ்டிக் பந்தில் அடைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு சிக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுதாகரன். நகை பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வீட்டின் மாடிக்குச் சென்ற அவர், பக்கத்து வீட்டை ஒட்டிய சுவரில் பிளாஸ்டிக் பந்து ஒன்று கிடப்பதை கண்டார்.

அதை கையில் எடுத்த சுதாகர் உற்றுபார்த்த போது, பந்தின் ஒருமுனையில் திரியும் சுற்றிலும் காகிதமும் சுற்றி இருந்தது. வெடிகுண்டாக இருக்குமோ என பயந்த அவர், அதை உடனே யானைக்கவுனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தகவலறிந்து போலீஸ் நிலையத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், பந்தை சோதனை செய்தனர். காலி ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்திற்குள், பட்டாசு தயாரிப்பில் பயன்படும் வெடிமருந்துகள் நிரப்பி திரி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயல் இழக்கச் செய்ய, எடுத்துச் சென்றனர்.

நாட்டு வெடிகுண்டு குறித்து, நிபுணர்கள் கூறும்போது, சில மாதங்களுக்கு முன் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியிலும், மயிலாப்பூரில் ஒரு வீட்டிலும், இதேபோன்ற ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்து மூலம் தயாரித்த வெடிகுண்டுகளை எடுத்துள்ளோம், என்றனர்.

யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Read more...

மொராக்கோவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 78 பேர் பலி

ரபாத்: மொராக்கோ நாட்டில் ராணுவ விமானம் மலையில் மோதி விழுந்து நொறுங்கியதில் 78 பேர் பலியானார்கள். இது ராணுவப் போக்குவரத்து விமானமாகும். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 3 பேர் உயிர் தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்கு சஹாராவுக்கு வெகு அருகே மலைப் பகுதியில் விபத்து நடந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 60 பேரும், 9 விமான ஊழியர்களும், 12 பொதுமக்களும் இருந்தனர். இவர்களில் 3 பேர் மட்டுமே படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மற்ற 78 பேரும் இறந்து விட்டனர்.

இதுவரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குலமிம் ராணுவ தளத்தில் இறங்குவதற்காக விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.

விபத்து நடந்த குலமிம் பகுதி மிகவும் வித்தியாசமானது. பாலைவனம், மலைகள், பள்ளத்தாக்கு என பல்வேறு பகுதிகள் அடங்கிய அபாயகரமான பிராந்தியமாகும் இது.

Read more...

திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமைக்கப் போவதாக அறிவிப்பு



சென்னை: சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைப்பது என்றும் பாமக முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு பலத்த அடி கிடைத்தது. திமுக கூட்டணியில் முதல் ஆளாகச் சேர்ந்து 30 தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சிக்கு நாமம் போடுவது போல 3 தொகுதிகளில் மட்டுமே மக்கள் வெற்றி கொடுத்தனர்.

தங்களது தோல்விக்கு திமுகவுடன் சேர்ந்ததே காரணம், திமுக மீதான ஊழல் புகார்கள் தங்களையும் பாதித்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் கட்சியின் மாவட்ட அளவிலான பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி வந்த பாமக இன்று தலைமை பொதுக் குழுக் கூட்டத்தை சென்னையில் கூட்டியது.

டாக்டர் ராமதாஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலையில் தொடங்கிய கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.

கட்சியின்பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் பேசுகையில், இனி திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் கூட்டு சேரக்கூடாது. தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக புதிய அணியை உருவாக்க வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் நாம் சீட் கேட்கின்ற நிலை ஏற்படக்கூடாது. நாம் தான் சீட் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரசியல் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கட்சிகள் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசியலில் இருந்து சினிமா முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். சினிமா தொடர்பே இல்லாமல் பாமக ஆட்சியமைக்க வேண்டும்.

நமது வலிமையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினரின் செயல்பாடுதான் நாம் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வருங்காலத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் பேசினர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவை பொதுக்குழு எடுத்தது. மேலும், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மாற்று அணி அமைக்கப் போவதாகவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுகளை பொதுக்குழுவில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார். அப்போது உறுப்பினர்கள் ஒருமனதாக கைகளைத் தட்டி வரவேற்றனர்.

ஜி.கே.மணி மேலும் கூறுகையில், தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், அதிமுக, திமுக என யாருமே மக்களுக்கு நல்லது செய்யவில்லை. எனவேதான் இவர்களுடன் சேராமல் மாற்று அணியை அமைக்க பாமக முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்லாமல் இனி வரும் தேர்தல்களிலும் மாற்று அணி அமைத்தே பாமக தேர்தல்களை சந்திக்கும். திமுகவுடன் மட்டுமல்லாது, அதிமுகவுடனும் அது கூட்டணி சேராது என்றார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு

முன்னதாக கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ காடுவெட்டி குரு திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும், பாமகவினருக்கு எந்தவித ஒத்துழைப்பையும் திமுகவினர் தரவில்லை. மாறாக வேண்டும் என்றே நாம் தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டனர். சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் என்றார்.

Read more...

புளியங்குடி அருகே இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்-சர்ச்சுக்கு தீ வைப்பு

புளியங்குடி: புளியங்குடி அருகே தேவாலயத்திற்கு வந்த இளம் பெண்ணுடன், பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தேவாலயத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

புளியங்குடி அருகே உள்ளது நெல்கட்டும் செவல் பச்சேரி கிராமம். இங்கு சுமார் 250 வீடுகள் உள்ளன. இங்கு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சால்வேஷன் கிறிஸ்தவ ஆலயத்தில் வாரம்தோறும் ஞாயிறன்று நடக்கும் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

அதே போல் அந்த தேவாலயத்தில் நடக்கும் திருமண விழா, ஞானஸ்தான விழா ஆகியவறறிலும் கலந்து கொள்வர். அனைவரையும் போல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகள் பரிமளா தேவியும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தார்.

இதற்கிடையே மூன்று மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பாதிரியார் மோகன்தாஸ் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றார். அப்போது மோகன்தாசுககும், பரிமளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசினர்.

இதையறிந்த மோகன்தாசின் மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மோகன்தாஸ் பரிமளா தேவியுடன் பழகி வந்ததுடன் கண்டித்த மனைவியையும் அடித்து உதைத்தார். இவர்களது கள்ளக்காதல் ஊருக்கு தெரிந்ததால் அவர்களது குடும்பதுத்துக்கு அவமானம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி பரிமளா தேவியுடன், பாதிரியார் மோகன்தாஸ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா தேவியின் தந்தை மதியழகன் தேவாலயத்திற்கு தீ வைத்தார். இதில் ஆலயத்திலிருந்த நாற்காலிகள், திரை மற்றும் பைபிள் உள்ளிட்ட நூல்கள் தீயில் கருகின.

திடீரென்று தேவாலயத்தில் தீ எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் புளியங்குடி டிஎஸ்பி தமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இளம்பெண் பரிமளா தேவியுடன் தலைமறைவான பாதிரியார் மோகன்தாசையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Thanks : Thats Tamil

Read more...

24.7.11

ரமழானை வரவேற்போம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

ரமழான் மாதத்தின் சிறப்பு: ‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..

இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது சிறப்பு: ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

மூன்றாவது சிறப்பு: ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நான்காவது சிறப்பு: ‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்

நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.

ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

‘நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).

‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.

ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).

ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:

பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.

‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

Read more...

17.3.11

மத்திய அரசில் 1300 பணி இடங்கள்....இளைஞர்களே..நல் வாய்ப்பு....


மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மாதிரி மதிப்பீட்டு அலுவலகத்தில், காலியாக உள்ள கள விசாரணையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள். ஒப்பந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய விவரம் வருமாறு:

பதவியின் பெயர்: கள விசாரணையாளர்
காலியிடங்கள் : 1300

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் புள்ளியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம் மற்றும் அந்தந்த வட்டார மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கணினியில் பணிபுரியும் திறனும் அவசியம். ஏற்கெனவே அரசு நிறுவனங்கள் தொடர்பான புள்ளிவிவர சேகரிப்புப் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: 1.6.2011 ஆம் தேதியின்படி 21 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், எழுத்து, கணினிப் பயன்பாடு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அந்தந்த வட்டார அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தென் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, மதுரை மற்றும் பெங்களூரு ஆகிய வட்டார அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 31.3.2011

அனுப்ப வேண்டிய முகவரி, மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.mospi.nic.in என்ற இணையதளத்தையோ அல்லது 12-18 மார்ச் 2011 தேதியிட்ட எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழையோ பாருங்கள்.

Read more...

தேமுதிகவை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை: 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த கையோடு நாளை மறு நாள் பிரசாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. மறுபக்கம் கொதித்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்து அவர் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கவும் அவர் தயாராக இல்லை. உண்மையில் ஜெயலலிதா போட்ட மெகா 'மாஸ்டர் பிளான்' திட்டம் இப்போதுதான் அம்பலமாக தொடங்கியுள்ளது.

யாருமே இந்த கோணத்தில் யோசித்துப் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். அந்த அளவுக்கு தனது முக்கியமான எதிரிக்கு சரியான ஆப்பு வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுகவும், கருணாநிதியும் மட்டுமே. அவர்கள் நிரந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவுக்கு முளைத்து வந்த மிகப் பெரிய எதிரி, முக்கிய எதிரி தேமுதிக.

தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது அதிமுக மட்டுமே. அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டது தேமுதிக. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் போல கடித்தாலும், கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான்.

எனவேதான் இந்த தேர்தலில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தரப்பு கடுமையாக முயன்று வெற்றியும் பெற்றது. இந்த வேலையைப் பார்த்தவர் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்ட அந்த பத்திரிக்கையாளர் தான்.

திமுகவை வலிமையோடு எதிர்க்கத்தான் ஜெயலலிதா, விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துள்ளார் எனறு எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க ஜெயலலிதாவின் திட்டமோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.

அது - முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக முளைத்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, பள்ளத்தில் விழ வைக்க வேண்டும் என்பது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மிக சாதுரியமாக ஜெயலலிதா விரித்த வலையில் தானாக வந்து விழுந்து சிக்கி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.

ஜெயலலிதாவின் திட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்...

1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது.

2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான். எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியிலிருந்து அவராகவே வெளியேறும் நிலையை ஏற்படுத்துவது ஜெயலலிதாவின் திட்டம்.

4. தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைப்பது.

இதுதான் ஜெயலலிதாவின் தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணிக் காரணமாக கூறப்படுகிறது.

தற்போது ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.

தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.

இந்த கோணத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஒருவித தாமதத்தை அதிமுக கையாண்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடைசி வரை உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் அனைவருடனும் பேசியதன் மூலம், அனைவரும் வேறு கூட்டணிக்குப் போக முடியாத நிலையையும் ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. அதாவது வேறு 'ஆப்ஷனே' இல்லாமல் செய்து விட்டார் ஜெயலலிதா.

ஒரு வேளை தேமுதிகவை இழுக்காமல், மற்ற கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகளை தர முடியாது என்று முன்பே கூறியிருந்தால், தற்போது வெகுண்டெழுந்துள்ள அனைவரும் (இடதுசாரிகள் தவிர்த்து) காங்கிரஸை தனியாக கூட்டிக் கொண்டு போய் தனிக் கூட்டணி அமைத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் அது நடந்து விடக் கூடாது என்பதால்தான் மிக மிக கவனமாக, காங்கிரஸ், திமுக தொகுகிப் பங்கீடு, ஒதுக்கீடு முடியும் வரை காத்திருந்து கவனமாக காய் நகர்த்தி சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அடி மிகப் பெரிய அடி என்பது மட்டும் உண்மை.

நிச்சயம் திமுகவே கூட ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அயர்ந்து போயிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

Read more...

29.10.10

கோடியில் ஊழல் செய்வோரை விட்டு விடும் அரசு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி : பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, அற்ப தொகையை வைத்திருப்பவர்களை பிடித்து பாடாய்படுத்துகிறது அரசு, என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த ராமுலு. கூட்டுறவுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். 1996ம் ஆண்டு இவரது வீட்டை ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறை தண்டனையும், இவர் மனைவி பெயரில் உள்ள இரண்டு வீடுகளை பறிமுதல் செய்து, அந்த வீட்டை விற்று பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும் படி கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராமுலுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஞான சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

"நாட்டில் கோடி கோடியாக சுருட்டும் முதலைகளையும், திமிங்கலங்களை எல்லாம் விட்டு விடுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும் இந்த பணம் அவர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனக்கூறி ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறிய தொகை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் உள்ள எல்லா அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டியிருக்கும்'

எனக்கூறி ராமுலு மீதான லஞ்ச குற்றச்சாட்டையும், ஓராண்டு சிறை தண்டனையும் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். தேவைப்பட்டால் பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Read more...

சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்-சோரபுதீன் சகோதரர் வக்கீல் தகவல்

அகமதாபாத்: சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரது மனைவி கெளசர் பீயை கொடூரமாக கற்பழித்து பின்னர் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்ததாக சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீனின் வக்கீல் முகுல் சின்ஹா குஜராத் உயர்நீதி்மன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சோராபுதீன், கெளசர் பீ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அமீத் ஷா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.எச்.சுக்லா முன்பு ஆஜராகி முகுல் சின்ஹா பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சோராபுதீனின் மனைவி கெளசர் பீ ஒரு பண்ணை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை. மாறாக அவரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர். அதுவும் அமீத் ஷாவுக்கு தெரிவித்த பிறகே கொன்றுள்ளனர்.

கெளசர் பீ குறித்து அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அவர் காணவில்லை என்றும் மர்மமான சூழ்நிலையில் அவர் மாயமாகி விட்டார் என்றும்தான் கூறியிருந்தன.

ஆனால் உண்மையில் கெளசர் பீயை ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர்.

2005ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி சோராபுதீனும், அவரது மனைவியும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் ஆந்திராவில் வைத்து பிடிக்கப்பட்டு ஹைதராபாத்-சங்க்லி இடையிலான பஸ்சில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவர்களை அகமதாபாத் கொண்டு வந்தனர். காந்தி நகர் புறநகர்ப் பகுதியில் உள்ள திஷா பண்ணை இல்லத்தில் அடைத்து வைத்தனர்.

சோராபுதீனை முதலில் கொன்றனர்:

பின்னர் நவம்பர் 26ம் தேதி அதிகாலையில், சோராபுதீனை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பண்ணை இல்லத்திற்கு வெளியே கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். நரோல் என்ற இடத்தில் இந்த போலி என்கவுன்டர் நடந்துள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு கெளசர் பீயை அர்ஹாம் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பண்ணை இடத்தில் அடைத்து வைத்தனர். அதன் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா என்பவர் ஆவார். அங்கு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா செளபே என்பவரின் காவலில் மூன்று நாட்கள் வைத்திருந்தனர்.

சித்திரவதை செய்யப்பட்ட கெளசர் பீ:

அங்கு வைத்து அவரை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்துள்ளனர். நவம்பர் 29ம் தேதி காலை கெளசர் பீயை செளபே ஏடிஎஸ் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வந்து ஏடிஎஸ் தலைவர் வன்சாரா முன்பு ஆஜர்படுத்தினார்.

அப்போது கெளசர் பீயை தீர்த்துக் கட்டம் எண்ணம் போலீஸாரிடம் இல்லை. அவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அனுப்பி விடவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் போக மறுத்து விட்டார். அப்போதுதான் வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கெளசர் பீயை வெளியே விட்டால் ஆபத்து என்று புரிந்திருக்கிறது. இதையடுத்து அவரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.

மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்ட கெளசர் பீ:

அதன்படி மாலை 4.30 மணிக்கு டிஎஸ்பி நரேந்திர அமீன் (இவர் ஒரு டாக்டர்) ஏடிஎஸ் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். வன்சாராவின் உத்தரவின் பேரில், கெளசர் பீக்கு, பென்டோதால் என்ற மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தினார் அமீன். இதனால் மாலை 5 மணியளவில் உயிரிழந்தார் கெளசர் பீ.

இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் கிட்டத்தட்ட 15 முறை அமீத் ஷாவிடமிருந்து அமீனுக்குப் போன் வந்துள்ளது. ஒரு ஜூனியர் அமைச்சரான ஷா, எதற்காக டிஎஸ்பிக்கு இத்தனை முறை போன் செய்ய வேண்டும்.

அப்போது குறுக்கிட்ட அமீத் ஷாவின் வக்கீல் - இந்த நேரத்தில் காந்தி நகரில் ஒரு நான்கு வயது சிறுவன் மர்மமான காணாமல் போய் விட்டான். அது குறித்து விசாரிக்கவே அமீனைத் தொடர்பு கொண்டார் ஷா என்றார்.

சின்ஹா தொடர்ந்து வாதிடுகையில், கெளசர் பீ இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதும், அவரது உடலை எரிக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு இன்ஸ்பெக்டர் வி.ஏ. ரத்தோட் என்பவரை கேட்டுக் கொண்டார் வன்ஸாரா. ரத்தோடும் மோத்திரா கிராமத்திலிருந்து விறகுகளை வாங்கினார். அதை போலீஸ் வேனில் நாத்துபாய் என்ற போலீஸ்காரர் கொண்டு வந்தார்.

அவரும், இன்ஸ்பெக்டரும், சபர்கந்தா மாவட்டம் பிரான்டிஜ் கிராஸ் சாலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அமீன், செளபே ஆகியோர் ஒரு நீல நிற ஜீப்பில் கெளசர் பீயின் உடலைக் கொண்டு வந்தனர். இன்னொரு வாகனத்தில் வன்ஸாராவும், ஐபிஎஸ் அதிகாரியான ராஜ்குமார் பாண்டியன் அங்கு வந்து சேர்ந்தனர்.

வன்ஸாராவின் ஊரில் வைத்து உடல் எரிப்பு

மூன்று போலீஸ் வாகனங்களும் அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றுள்ளன. பின்னர் வன்ஸாராவின் சொந்த ஊரான இல்லாலுக்கு வந்து சேர்ந்தனர். அஹ்கு வைத்து ஒரு ஆற்றங்கரையில் கெளசர் பீயின் உடலை எரித்தனர். இந்த நிகழ்ச்சி நவம்பர் 29-30க்கு இடைப்பட்ட நள்ளிரவில் நடந்துள்ளது.

கெளசர் பீயைக் கற்பழித்த சப் இன்ஸ்பெக்டர்:

இதற்கிடையே கெளசர் பீயை ஏடிஎஸ் காவலில் வைத்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்த சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இதுகுறித்து சிபிஐ விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

சோரபாபுதீன் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட நாளில் ஏடிஎஸ் அலுவலகத்தி்ல் பணியில் இருந்தவரான சப் இன்ஸ்பெக்டர் செளபேதான் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளார்.

இதுகுறித்து ரவீந்திர மக்வானா என்ற உதவி சப் இன்ஸ்பெக்டர் (தற்போது ரயில்வே போலீஸில் உள்ளார்) சிபிஐயிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது...

அப்போது செளபே சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது பொறுப்பில்தான் 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார் கெளசர் பீ. அதைப் பயன்படுத்தி மூன்று நாட்களும் கெளசர் பீயைக் கற்பழித்து பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தினார் செளபே

சோராபுதீன் பிடிபட்டதற்குப் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று போலீஸ் அதிகாரிகளான அஜய் பர்மார், சாந்தாராம் சர்மா ஆகியோரிடம் கேட்டேன்.

அப்போது பர்மார் கூறுகையில், நான், ராஜ்குமார் பாண்டியன், தாபி, செளபே, செளகான் ஆகியோர் ஹைதராபாத் சென்று சோராபுதீனையும், கெளசர் பீயையும் பிடித்து சங்க்லி செல்லும் பஸ்சில் கூட்டி வந்ததாகவும், பின்னர் அகமதாபாத் கொண்டு சென்றதாகவும், அர்ஹாம் பண்ணை இல்லத்திற்குக் கூட்டிச் சென்றதாகவும் கூறினார்.

அங்கு வைத்து சோராபுதீனை வன்ஸாராவும், பாண்டியனும் விசாரித்ததாகவும் கூறினார் பர்மார்.

அப்போது பர்மாரிடம் நான், செளபே, கெளசர் பீயை கற்பழித்த விவரத்தைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் மக்வானா.

தற்போது மக்வானாவின் வாக்குமூலத்தை கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக சிபிஐ சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

கெளசர் பீ கொல்லப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமீத் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்தது:

இந்த நிலையில் இன்று அமீத் ஷாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீனில் அமீத் ஷாவை விடுதலை செய்யலாம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

கடந்த ஜூலை 26ம் தேதி கைது செய்யப்பட்டார் ஷா. ஜாமீன் கோரி அவர் சிபிஐ கோர்ட்டை முதலில் நாடினார். ஆனால் அங்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷா.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் இதுவரை ஐபிஎஸ் அதிகாரிகளான வன்ஸாரா, ராஜ் குமார் பாண்டியன், திணேஷ், அபய் செளடாஸ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை முன்பு விசாரித்தவரான ஐபிஎஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரியின் பங்கு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read more...

இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடித்தது: பூகம்ப பலி 394-ஆக உயர்வு

ஜகர்தா: இந்தோனேசியாவில் மெராபி எரிமலை மீண்டும் வெடித்தது.

இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இது வரை 394 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை. சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மர உச்சியில் மீட்கப்பட்ட குழந்தை:

சுனாமி பேரலையில் சிக்கி பல வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகினர். அவர் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சுனாமி அலையால் வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று மரத்தின் உச்சியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. இதே போன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனும் பத்திரமாக மீட்கப்பட்டான். ஆனால் அவன் பெற்றோர் பேரலையில் சிகக்கி உயிர் இழந்தனர்.

சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கும்பல் கும்பலாக அடக்கம் செய்யப்படுகின்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அந்நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அந்த எரிமலை நேற்று மீண்டும் வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. இதையடுத்து இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆசியான் நாடுகளின் கூட்டம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாஸ் யுதோ யோனோ அங்கிருந்தே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார்.

கூட்டம் முடிந்தவுடன் தாயகம் திரும்பி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் ஜூலி யன் பாஷா தெரிவித்தார்.

Read more...

28.10.10

அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை : திருமாவளவன் அறிக்கை

காஷ்மீர் குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.

`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாக பேசினர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Read more...

26.10.10

அனைத்து கலவரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பங்குண்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டு


ஆர்.எஸ்.எஸ் எனப்படும் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும், தடை செய்யவும் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரபிரதேஷ மாநில காங்கிரஸ் தலைவி ரிதா பகுகுணா ஜோஷி நிருபர்களிடம் பேசுகையில் இவ்வேண்டுகோளை குறிப்பிட்டார். இந்த பயங்கரவாத அமைப்பின் மீது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றும், கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், தயங்காமல் இந்த இயக்கத்தைத் தடை செய்யவேண்டும்" என்றார் ரிதா.

2007 அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் பெருந்தலைவர் ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படுவது குறித்து அவர் சொல்லும்போது, "அநேகமாக, எல்லா இனக்கலவரங்களிலும் இவர்களோ, இவர்களின் துணை அமைப்புகளோ காரணமாய் உள்ளன" என்றார் ஜோஷி.

நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து நாசவேலை செய்யும் ஆர் எஸ் எஸ் ஹைதரபாத் மக்கா மசூதி, ஜெய்ப்பூர். சம்ஜாதா வண்டி உள்ளிட்ட குண்டுவெடிப்புகளிலும் பங்கேற்றுள்ளதாக விசாரணை ஆணையங்கள் சுட்டியதைக் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.

Read more...

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி இந்திரேஷ்குமார் விரைவில் கைது.


புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான தீவிரவாதி இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்.ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.
குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து தீவிரவாதி இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களிலும் தீவிரவாதி இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது. குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான தீவிரவாதி சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனோஜ்சிங் என்ற பெயரில்தான் தீவிரவாதி சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். தீவிரவாதி சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து தீவிரவாதி சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய தீவிரவாதி சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தீவிரவாத தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்தூரிலிருந்து தீவிரவாதிசுனில் ஜோஷியும், தீவிரவாதி லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

தீவிரவாதி இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.

Read more...

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி


டெல்லி: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகளை அறிவிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று உச்சநீதிமன்றம் விலக்கியது. இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகவுள்ளன.

இருப்பினும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை தொடர்புடைய வழக்கில் மட்டும் தீர்ப்பை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது நினைனவிருக்கலாம்.

ஜாப்ரி கொலை வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. எஸ்.ஐ.டி. பலரையும் தொடர்ந்து விசாரித்து வருகிறது. எனவே இதில் மட்டும் தீர்ப்பு அறிவிக்கப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த மே 6ம் தேதி தீர்ப்புகளை வெளியிடுவதற்கு இதே பெஞ்ச் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

இந்தோனேசியா சுனாமிக்கு 113 பேர் பலி, எரிமலை வெடித்து 18 பேர் சாவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் அதிகமானோரைக் காணவில்லை.

இந் நிலையில் இன்றும் அந்த நாட்டில் மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும் அந் நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மெளன்ட் மெராபி எரிமலை நேற்று வெடித்துச் சிதறியது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

முன்னதாக நேற்று முன் தினம் இரவு இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மென்டாவி தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து 10 அடி உயர சுனாமி அலைகள் ஏற்பட்டன.

கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு பல கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்து வீடுகள் தரைமட்டமாயின. இதில் 113 பேர் பலியாகிவிட்டனர். இதில் 15 உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 500 பேரைக் காணவில்லை.

Read more...

குஜராத் கலவரம்-சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளகது.

ராகவன் தலைமையிலான விசாரணைக் கமிட்டியில், ஒய்.சி.மோடி, கே.வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Read more...

24.10.10

2002 குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்

அகமதாபாத்: 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

Read more...

23.10.10

அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

டோக்கியோ : ஜப்பான் நாட்டில் இவோ ஜிமா என்ற தீவில் இரண்டு பெரிய பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 2000 ஜப்பான் போர் வீரர்கள் புதைக்கப்படிருக்கின்றனர் என்றும், இரண்டாம் உலகப் போரில் சண்டை நடந்த இடங்களில் இதுவே மிகக் கொடூரமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகபோரின் முடிவில் அமெரிக்கா தனது படைகளால் கொல்லப்பட்ட 51 ஜப்பானிய படைவீரர்களின் உடலை இந்த தீவில் இரு இடங்களில் புதைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஜப்பானிய ஆய்வாளர்கள் அந்த வீரர்களின் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட இந்த பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புக்குழு வெள்ளிகிழமை தனது அறிக்கையை ஜப்பான் பிரதமருக்கு தெரிவிக்கவிருந்தது.

இந்த தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்ட ஜப்பான் சுகாதார அமைச்சக அதிகாரிகள் 51 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த இரு இடங்களிலும் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் உள்ளதாகவும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அங்கு புதைந்திருக்கும் வீரர்களின் எண்ணிகையை இப்போது உறுதிப்படுத்திக் கூறவோ அல்லது, இந்த தேடுதல் குழுவின் அறிக்கை பற்றிய வேறு விசயங்களைப் பற்றியோ இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1945 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின், இந்தத் தீவில் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த 12,000 ஜப்பானிய வீரர்களைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதிய ஜப்பானிய அரசு அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த மீட்புக்குழுவின் கண்டுபிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெறும் ஜப்பானின் தேடுதலுக்கு ஒரு விடையைக் கொடுத்துள்ளது.

ஜப்பான் அரசால் இவோடோ என்று பெயரிடப்பட்ட இந்த தீவு அன்றைய அதிநவீன ரேடார் நிலையம், மூன்று விமான ஓடுதளம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மிக முக்கிய தளமாக இருந்தது. இந்தத் தீவை கைப்பற்றுவது போரில் அமெரிக்காவிற்கு முக்கிய இலக்காக இருந்தது. இதன் மூலம் மட்டுமே ஜப்பானின் மீது அணு குண்டை போடும் தனது திட்டம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதியது. கிட்டத்தட்ட 22,000 ஜப்பானிய வீரர்களைக் கொன்று இந்த தீவைக் கைப்பற்றி பசிபிக் கடலில் தனது ஆதிக்கத்தின் அடையாளமாக இந்த தீவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சுரிபசியில் தனது கொடியை அமெரிக்கா ஏற்றியது.

இப்போரில் 6,821 அமெரிக்கர்களும், 21,570 ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் பிணங்கள் தோண்டியெடுக்கப் பட்டுவந்தன. ஆனால் 12,000 ஜப்பான் மற்றும் 218 அமெரிக்க வீரர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.

தற்போதைய அறிக்கையின் படி ஜப்பானின் ஓடுதளத்திற்கு அருகில் 2000 உடல்களும் சுராபிச்சி சிகரத்தின் அடிவாரத்தில் 70 முதல் 200 உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இவற்றை மொத்தமாக மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

4.8.10

கார் மீது குண்டுவீச்சு-ஈரான் அதிபர் உயிர் தப்பினார்


தெஹ்ரான்: ஈரான் அதிபர் மெஹ்மூத் அஹமதிநிஜாதைக் கொல்ல முயற்சி நடந்தது. அவரது வாகனம் மீது கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இன்று காலை மேற்கு ஈரானி்ல் உள்ள ஹமேதான் நகருக்கு அவர் சென்றார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.

இந் நிலையில் அகமதிநிஜாத் சென்ற காரை குறி வைத்து ஒரு கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அந்த குண்டு தவறி இன்னொரு கார் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் கார் பலத்த சேதமடைந்தாலும் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததையடுத்து அதிபரின் வாகனமும் பிற வாகனங்களும் அங்கிருந்து வேகமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இநத சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் அவர் நேரடியாக உரையாற்றினார். ஆனால், இந்த குண்டுவெடிப்பு குறித்து அவர் ஏதும் பேசவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன் இன்று காலை சிரிய நாட்டு அதிபர் பஸர் ஆசாத்துடன் அவர் தொலைபேசியில் பேசினார்.

அப்போது லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேலியப் படைகள் ஊடுருவியதை அவர் கண்டித்ததோடு, இந்த விவகாரத்தில் லெனானில் இஸ்ரேலை எதிர்ததுப் போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.

தன்னைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சில காலமாகவே அகமதிநிஜாத் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more...

31.7.10

ஹரி மஸ்ஜித் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி


புதுடெல்லி,ஜுலை31:மும்பையில் 1992 ம் ஆண்டு ஹரி மஸ்ஜிதில் நடந்த போலீஸ் துப்பாகிக் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இது சம்பந்தமான வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சதாசிவம் மற்றும் தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ஞ்ச் சிபிஐ விசாரணையை தொடர தீர்ப்பளித்தனர்.

முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2008ல் மகாராஷ்டிர அரசு தொடுத்த மனுவை இந்த அமர்வு நீதி மன்றம் நிராகரித்தது.

மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தது.

மகாராஷ்டிர அரசின் எதிர்ப்பு மனுவையடுத்து 2009ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிலுவையில் வைத்திருந்தது .

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட பாரூக் முகமது,காசிம் மட்கர் ஆகியோர் கூறுகையில்;"ஹரி மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும்" என வலியுறுத்தினர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களின் போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

Read more...

காஷ்மீரில் மீண்டும் வெடித்தது வன்முறை-பல இடங்களில் ஊரடங்கு அமல்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு காஷ்மீரில் உள்ள பட்டான் என்ற இடத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் முகாமை சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்.

சம்பல் பகுதியில் உள்ள நய்ட்காட் என்ற இடத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஆயுதப் படைப் பிரிவு முகாமை சூறையாடவும் முயற்சிகள் நடந்தன

இந்த சம்பவத்தின்போது எஸ்.பி. ஷேக் ஜூனைத் என்பவர் காயமடைந்தார். பல போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Read more...

சோராபுதீனைக் கொல்ல மாஜி பாஜக அமைச்சருக்கு ரூ.10 கோடி கொடுத்த மார்பிள் முதலைகள்

டெல்லி: சோராபுதீன் ஷேக்கை படுகொலை செய்ய ராஜஸ்தான் முன்னாள் பாஜக அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவுக்கு மார்பிள் தொழிலை நடத்தி வரும் முதலாளிகள் ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்ததாக சோராபுதீன் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான அஸம் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.

சோராபுதீன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து பின்னர் கொல்லப்பட்ட பிரஜாபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரது அறையில் இருந்தவர்தான் இந்த அஸம்கான்.

சோராபுதீன் கொலை குறித்து அஸம்கான் கூறுகையில், பாஜக தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவுக்கு, ஆர்.கே.மார்பிள்ஸ் நிறுவனம் ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்து சோராபுதீனை தீர்த்துக் கட்டி கோரியது. இந்தப் பணத்தை மார்பிள் நிறுவன முதலாளிகள் சேர்ந்து கொடுத்தனர்.

இந்தத் தகவலை பிரஜாபதி என்னிடம் தெரிவித்தார். பல கோடி பணத்தை ஆர்.கே மார்பிள்ஸ் நிறுவனம் சக முதலாளிகளிடம் வசூலித்தது. அதில் ஒரு பகுதியை அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர். மிச்சப் பணத்தைத்தான் கட்டாரியாவிடம் கொடுத்தனர். அவருக்கு மட்டும் ரூ. 10 கோடி தரப்பட்டுள்ளதாக பிரஜாபதி தெரிவித்தார்.

சோராபுதீன் கொலை வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் சேர்ந்து பிரஜாபதியைக் கொலை செய்து விட்டனர்.

நான் தற்போது இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னைத் தீர்த்துக் கட்ட அவர்கள் முயலலாம் என அஞ்சுகிறேன். மிரட்டல் தொலைபேசிகளும் வருகின்றன என்றார் அவர்.

ஆனால் இந்தப் புகாரை கட்டாரியா மறுத்துள்ளார். நான் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டு காலமும் என்னை சிபிஐ இதுதொடர்பாக அணுகவே இல்லை. நான் இதில் தொடர்பு கொள்ளவில்லை என்பதை 100 சதவீதம் நம்புகிறேன் என்றார் கட்டாரியா.

Read more...

ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 500 லாரிகள் ஓடாது


சென்னை: மத்திய அரசின் சுங்கவரி முறைகேட்டை சீரமைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம், தென்இந்திய மோட்டார் அசோசியேஷன் தலைவர் கோபால், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் சுங்கவரி வசூலிப்பில் நடந்து வரும் முறைகேடுகளை சீரமைக்கவும், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை மறுதினம் (ஆக., 2) முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, வரும் 5ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 6ம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த டேங்கர், டிப்பர் லாரி மற்றும் வேன் ஆகியவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி, பொன்னேரி செல்லும் நெடுஞ்சாலையை இதுவரை சீரமைக்காத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து, உயிரிழப்புகள் தொடர்கின்றன. வாகனங்கள் ரிப்பேராகி இயக்க முடியாமல் தொழில் பாதிக்கப்படுகிறது.

கலந்தாய்வு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசியதாவது: இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து, சுங்கவரி வசூலிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. 200 கோடி ரூபாய் சுங்கவரி வசூலிப்பிற்காக தனியாரிடம் 25 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரு நாளைக்கு 20 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இத்தொகை மாதத்தில் ரூ.6 கோடி வீதம் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் என 25 ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாயாக வசூலாகிறது. இந்திய சாலைகளை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு "தாரை' வார்த்து கொடுத்துள்ளது. இதனால், இந்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு 52 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுங்கவரியாக நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஓசூரிலிருந்து தொப்பூருக்கு 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு 330 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசு என்று சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மூன்று ரூபாய் 45 காசு வசூலிக்கப்படுகிறது.

இது போன்ற முறைகேடுகளை அரசு உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 2ம் தேதி முதல் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால், 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது. அதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அவற்றின் விற்பனை வரி 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 8 சதவீதமாகத்தான் உள்ளது. இதையும் குறைக்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு சண்முகப்பா கூறினார். கூட்டத்தில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

29.7.10

ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்


டெஹ்ரான்,ஜுலை29:ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்ததேவை ஈரானுடைய எதிரிகளின் 'கூட்டாளி' என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றை ஈரான் கொண்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து ரஷ்யா, ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்தே அஹமதி நிஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து ஈரானை நோக்கிய ரஷ்யாவின் நிலைப்பாட்டில் அதிக மாற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் அதிக அழிவுமிக்க அணுகுண்டு தயாரிப்பு முயற்சியில் யுரேனிய செறிவாக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மெத்ததேவ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.

மேலும் ஈரான் தங்களது வர்த்தகப் பங்காளராக இருப்பினும் அணுவாயுத தயாரிப்புக்கான அதன் யுரேனிய செறிவாக்கல் திட்டம் தொடர்பாக தாம் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக மெத்ததேவ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையினால் கொண்டுவரப்பட்ட ஈரானின் அணுவாயு திட்டத்திற்கெதிரான நான்கு கட்ட தடைக்கு ரஷ்யா ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து ஈரான்-ரஷ்யா உறவில் முறுகல்நிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more...

Lorem Ipsum

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP