அர்ச்சகர் பெண்களுடன் உல்லாசம்

காஞ்சீபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மச்சேச பெருமாள் கோவில் அர்ச்சகர் பெண்களுடன், கோவில் கருவறைக்குள்ளேயே உல்லாசமாக இருந்ததாக பெரும் புகார் கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த அர்ச்சகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் தேவநாதன் (35). இவர், செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிராமணர் தெருவில் வசித்து வருகிறார்.

கருவறை முன்பாகவே உல்லாசம்...

பக்தர்கள் வராத நேரத்தில், பல பெண்களிடம் கோவில் கருவறை முன்பாகவே அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்து வந்ததாக பரபரப்பான தகவல் வெளியானது.

இதையடுத்து சிலர் அர்ச்சகர், பெண்களுடன் உல்லாசமாக இருந்த அலங்கோலத்தை, வீடியோவில் படம் பிடித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதைப் பார்த்த போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் கருவறை முன்பாக பல்வேறு பெண்களுடன் தேவநாதன் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்தனர். சில பெண்களுடன் கருவறைக்குள்ளும் உல்லாசமாக இருந்துள்ளார் தேவநாதன்.

இதையடுத்து எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் இது கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், இந்திய தண்டனை சட்டம் 295-ஏ பிரிவின் கீழ் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீது வழக்குப் பதிவானதை அறிந்ததும் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் ஓடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் தற்போது தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுன் உல்லாசமாக இருந்ததாக இதுவரை தமிழகத்தில் எந்த புகாரும் வந்ததில்லை. ஆனால் தற்போது வீடியோ ஆதாரத்துடன், ஒரு அர்ச்சகர் செய்த அசிங்கம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: