மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை: சிதானந்த மூர்த்தி

பெங்களூர்: மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் டாக்டர் சிதானந்த மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியது:



அண்மைக் காலமாக கர்நாடகம், கேரள மாநிலங்களில் இந்துப் பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. கேரளத்தில் இதுவரை 2,629 பேர் காதல் ஜிஹாத் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.50 சதவிகிதம் குறைந்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மத மாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சித்த கங்கா, ஆதிசுஞ்சுனகரி, பெஜாவர் உள்பட 50 மடாதிபதிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி ரமாஜோயிஸ் உள்பட சட்ட அறிஞர்களும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத மாற்றம் செய்வது குற்றம் என்று உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது. பிற மொழி மற்றும் மதத்தின் மீது உள்ள வெறுப்பால் இவ்வாறு கூறவில்லை. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடே இதை வலியுறுத்துகிறோம். மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவரும் பட்சத்தில் அதை எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி,
இந்நேரம்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: