அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா?

அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.

உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.



1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.

லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: