ரங்கியா (அசாம்): அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டது. அதிருஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அசாமில் உள்ள ஹேலம் நகர் மற்றும் நிஜ் போகுவான் ரயில் நிலையங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது.
முர்கோங்சிலெக்-ரங்கியா என்ற இந்த பாசஞ்சர் ரயில் சுமார் 400 பயணிகளுடன் ரங்கியா நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போது அதிகாலை 3.47 மணிக்கு திடீரென தடம் புரண்டது.
இதில் ரயிலின் 7 பெட்டிகள் சேதமடைந்தன. எனினும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment