வி.ஏ.ஓ.​ ஆக வேண்டுமா? - தயாராகுங்கள்

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் சம்பளத்தில் கட் கிடையாது.​ அகவிலைப்படி,​​ வாடகைப்படி என அவ்வப்போது உயர்வு உண்டு...​ பணிச்சுமை இல்லை.​ இதுவெல்லாம் அரசுப் பணிக்கு உரிய சிறப்பு என்றால் எந்த அரசாங்க ஊழியரும் அடிக்க வரமாட்டார்.​ கால் காசு என்றாலும் கவர்மெண்ட் காசு என்ற சொல் வழக்கு தமிழகத்தில் மிக பிரபலம்.​ கால் காசு அல்ல...அரசுப் பணி என்றால் இப்போது கை நிறைய காசு தரப்படுகிறது.​ ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை உள்ளிட்ட சலுகைகளால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.​ இந்தச் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் அரசுப் பணிகளுக்கான தேர்வை எழுதும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.​​ ​ ​ ​


​ ​ ​ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.​ இதில்,​​ குறிப்பிட்டத்தக்க பணியிடம்,​​ வி.ஏ.ஓ.​ என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடமாகும்.​ கடந்த 2006-ம் ஆண்டு 2 ஆயிரத்து 500 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றது.​ அதில்,​​ ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்டு வெற்றிக் கனியை பறித்தனர்.
​ ​ ​ ​ இப்போது அரசுப் பணி என்ற கனவுடன் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.​ 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.​ பணியிடங்களை நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.​ அதில்,​​ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆயிரத்து 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.​​
​ ​ ​ வயதும்,​​ தேர்வும்:​ வி.ஏ.ஓ.​ பணியிடத்துக்கான தேர்வை எதிர்கொள்ள உங்களுக்கு 21 வயது நிரம்பி,​​ 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.​ நீங்கள் புத்திசாலியான இளைஞர்கள் என்பதால்,​​ 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை படித்தாலே போதும்.​ தேர்வில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் அனுபவ அறிவு படைத்தவர்கள்.​ தேர்வில் கொள்குறி வகை அடிப்படையில் ​
மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.​ ​(100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் வழியிலான மொழி வழி கேள்விகளாகவும்,​​ மேலும் 100 கேள்விகள் பொது அறிவில் இருந்தும் கேட்கப்படும்).​ ​
​ ​ ​ பத்தாம் வகுப்பு வரையுள்ள வரலாறு,​​ சமூக அறிவியல்,​​ அறிவியல் பாடங்களை தெளிவாக படித்தாலே போதும்.​ பொது அறிவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை நன்றாக நினைவு கூருங்கள்.​ கடந்த காலங்களில் கேட்கப்பட்ட ​ ​ வினாக்களின் தொகுப்பை அசை போடுவதும் நல்லது.​​
​ ​ ​ ​ ​ ​ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்,​​ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,​​ பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் 40 வயது வரை தேர்வை எழுதலாம்.​ மற்ற பிரிவினர் 30 வயது வரை எழுத வாய்ப்புண்டு.​ மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிநியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது.​ இதனால்,​​ பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நிவாரணம் அளிக்க 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்பட்டது.​ 45 வயது வரை ஒருவர் வி.ஏ.ஓ.​ தேர்வு எழுதலாம்.​​

​ ​ ​ ​ ​ ​ ​படிக்காத பாமர மக்களிடம் அரசின் நலத் திட்டங்கள்,​​ அவர்களுக்கான அத்தியாவசியச் சான்றிதழ்களை வழங்குவது போன்ற மக்கள் தொடர்பு அதிகமுள்ள பணிகளில் வி.ஏ.ஓ.க்கள் ஈடுபடுகின்றனர்.​ சுய நலமில்லாத,​​ பொது நல நோக்குடனுடனான பணியில் இளைஞர்கள் சேர்ந்தால் அதுவும் ஒருவகையில் தேச சேவை தானே அப்ப தயாராகிடீங்களா வி.ஏ.ஓ.​ தேர்வுக்கு....விரைவில் வருகிறது தேர்வுக்கான அறிவிப்பு.- கே.பாலசுப்பிரமணியன்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: