பட்கலுக்கு ஆதரவாக வாதாட தயாராகும் வழக்கறிஞர்

மும்பை:சில நாட்கள் முன்பு புனே குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமத் பட்கலுக்கு ஆதரவாக பிரபல கிரிமினல் வழக்கறிஞர் முபீன் சோல்கர் வாதாடவுள்ளார்.

'பட்கலின் உறவினர்கள் நேற்று இரவு என்னை வந்து சந்தித்தனர். பட்கலை பற்றி என்னால் இப்போது எதுவும் கூற இயலாது!' இது குறித்து அவரின் உறவினர்களிடம் உரையாட இருப்பதாக வழக்கறிஞர் சோல்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மங்களூர் விமான நிலையத்தில் வைத்து பட்கல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் மனைவி ரிஹானா, மாமனார் முஹம்மது அலி மற்றும் அத்தை ஹலிமா ஆகியோர் முபீன் சோல்கரை சந்தித்து பேசினர்.

புனே குண்டு வெடிப்பையும் பட்கலையும் தொடர்புபடுத்தி மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி அளித்திருந்தாலும், ஏ.டி.எஸ். ஆயுத வழக்கொன்றை அவர் மேல் சுமத்தியுள்ளது.

பட்கலுக்காக முபீன் சோல்கர் வாதாடும் இச்சமயத்தில், பல அப்பாவிகளுக்காக போராடி தங்கள் உயிர் நீத்த ஷாஹித் ஆஸ்மி, நௌஷாத் காஸிம்ஜி, கர்கரே போன்ற உத்தமர்கள் தான் நம் நினைவிற்கு வருகின்றனர்.
source:siasat
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: