100 ஆண்டு பழமையான மசூதியில் தொழுகை

வாலாஜாபேட்டை,​​ ஜூன் 27: ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் உள்ள 100 ஆண்டு பழமைவாய்ந்த மசூதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடத்தினர் .​ ​ ​

ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் இம்மசூதி அமைந்துள்ளது.​ ஷேக்அப்துல் வஹாப் ​ ஹக்னுமா மசூதி என அழைக்கப்படும் இந்த மசூதி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து

வந்தது.​ அதனால் இதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த முடியவில்லை.

இந்நிலையில்,​​ ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபேட்டை,ராணிப்பேட்டை,​​ ஆர்க்காடு,​​ வேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இம்மசூதியை சீர்செய்தனர்.

அதைத் தொடர்ந்து மாலையில் 300-க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர்.

தொழுகையின்போது எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் முகுந்தன்,​​ வாலாஜாபேட்டை வட்டாட்சியர் கிருபானந்தம்,​​ டி.எஸ்.பி.கள் பட்டாபி,​​ மகேந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: