அந்த 40 பேரில் உங்கள் பெயரும் இருந்தால்...?

கடந்த ஒன்பதாண்டுகளாக பொய்வழக்குகளில் அலைக்கழிக்கப்பட்டுவரும் நமதூர் சகோதரர்களின் அவலநிலை குறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நம் கவனத்திற்கு வந்த தகவலில் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

2001ம்ஆண்டு ஒருநாள் இரவில் CMP லேன்,புதுமனைத்தெருவில் உள்ளவர்களையும் வீடுகளையும் விஷமிகள் தாக்குவதாகப் பரவிய செய்தியைத்தொடர்ந்து தாய் வீட்டிலும் மனைவி வீட்டிலும் உறங்கி கொண்டிருந்த அத்தெருவைச் சார்ந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு தங்கள் உற்றார்-உறவினரைக்காக்க வேண்டுமே என்று விரைந்தனர்.

என்னவோ ஏதோவென்று கண்டவர்களும் கேட்டவர்களும் தாக்குதலுக்குள்ளானதாகச் சொல்லப்படும் CMP லேனுக்குச் சென்றபோது, அருகிலுள்ள செட்டித்தோப்பு காலனியிலிருந்து சிலர் கூட்டத்தினரை நோக்கி கல்வீசித் தாக்கியுள்ளனர்.

கலவரம் உண்டாக்கிய விஷமிகள் யாரென ஓரளவு கணித்த கூட்டத்தினர் கல்வீச்சு வந்த பகுதியைநோக்கி சற்று நெருங்கியதும் பயங்கர ஆயுங்களுடன் காலணியிலிருந்து மேலும் சிலருடன் கூட்டத்தினரைத் திரட்டிக வந்தவர்கள்மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நள்ளிரவில் நடந்தக் கலவரத்தில் விஷமிகள் சிலர் அங்குள்ள குடிசை வீடுகளுக்குத் தீவைத்துவிட்டு பழியை தங்கள் உறவினர் வீடுகளைக் காப்பதற்காகவந்த கூட்டத்தினர்மீது போட்டுவிட்டனர். இந்தக் கலவரம் மற்றும் தீவைப்பில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த செட்டித்தோப்பு காலணியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மனைவியும் சுப்பிரமணியம் என்பவரின் தாயாருமான மூதாட்டி ஒருவர் இறந்து விட்டார்.

தொடக்கத்தில் முஸ்லிம் வீடுகள்மீதான தாக்குதலைக் கட்டுப் படுத்தத் தவறிய அதிரை காவலர்கள், கலவரக்காரர்களிடமிருந்து உறவினர்களையும் உடமைகளையும் காப்பதற்காகக் கூடிய முஸ்லிம்கள்மேல் கொலை, கொள்ளை, தீவைப்பு, கலவரம் உண்டாக்குதல், கூட்டுச்சதி, பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் ஆகிய வழக்குகளோடு, தாழ்த்தப்பட்டவர்களை ஜாதீ ரீதியிலான கொடுமையிலிருந்து பாதுகாகப்பதற்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் சேர்த்து 10 முஸ்லிம்களை முதல் குற்றவாளியாகவும் சுமார் 40க்கும் மேற்பட்ட, பெயர் குறிப்பிடப்பதாத அப்பாவிகள்மீதும் பொய்வழக்குப் பதிவு செய்து கடந்த ஒன்பது வருடங்களாக நடந்து வருகிறது.

இச்சம்பவம் நடைபெற்றபோது மத்தியில் பாரதிய ஜனாதவும் மாநிலத்தில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தன. அரசியல் அநாதைகளாக இருந்த தமிழக முஸ்லிம்களுக்கு ஆபத்பாந்த அமைப்பாக அப்போதைய ஒருங்கிணைந்த தமுமுக இருந்தது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் அதிரை தமுமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் சட்டரீதியில் வழக்குகளை எதிர்கொண்டு விடுதலையாகி விட்டனர். மேலும் சிலர் தனியாக வழக்குகளை எதிர்கொண்டு விடுவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் எவ்வித இயக்க பின்புலமுமில்லாத அப்பாவி இளைஞர்கள்மீதான வழக்கை தொடர்ந்து நடத்த யாருமின்றி ஒருசில நலன் விரும்பும் அதிரை பிரமுகர்களுடன் அவ்வப்போது நீதிமன்றம் சென்று வழக்கைச் சந்தித்து வருகிறார்கள்.

இவர்களில் இருகால்களும் ஊனமடைந்த மாற்றுத்திறனாளர்முதல் அப்போது 17-18 வயதாக இருந்த பள்ளி மாணவர்கள்வரை வழக்குகளிலிருந்து விடுவிக்க வழியின்றி பொய்வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இயக்க ரீதியில் வழக்கை நடத்திவந்த தமுமுக, பின்னர் ததஜ என்றும் அதிலிருந்து இதஜ என்று பிரிந்துள்ளதால் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு யாரிடம் சென்று முறையிடுவதென அறியாது, வக்கீல் மற்றம் நீதிமன்ற செலவுகளை எதிர்கொள்ள முடியாது மிகுந்த சிரமப்படுகிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

நமதூர் அதிரையில் ஊர்தலைமையோ அல்லது முஸ்லிம்களுக்கு அரசியல், சட்ட ரீதியில் உதவக்கூடியவர்களோ இல்லை என்பதை சாதகமாகப் பயன்படுத்தி, இத்தகைய பொய்வழக்குகளில் சிக்க வைக்கப் பட்டு, நம் பொருளாதாரமும் நேரமும் வீணடிக்கப்படுகிறது.

இவ்வழக்குகளில் முக்கியசாட்சியமான பிச்சை அவர்களின் மனைவி மாரடைப்பு காரணமாகவே இறந்ததாக மருத்துவ தகவல் அறிக்கை உறுதி செய்துள்ளதால் கொலை வழக்குகளில் (308,309 பிரிவுகள்) இருந்து விடுவிக்கப்படலாம்.ஆனால் பிறவழக்குகளில் குறிப்பாக வன்கொடுமை தடுப்பு வழக்கில் திட்டமிட்டே இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அதிரையைப் பொருத்தவரை வீட்டுப்பணி வேலை செய்பவர்களில் 90% பேர், செட்டித்தோப்பு காலணியைச் சேர்ந்தவர்களே. தங்கள் மதத்தவர்களே வீடுகளுக்குள் அனுமதிக்க மறுக்கும்போது உள் வீடுகளிலும், படுக்கையறைகளிலும் எவ்வித பேதமுமின்றி அவர்கள் புழங்க அனுமதிக்கப்படுவதை இன்றுக் காணமுடியும்.

திருமணங்கள், பண்டிகை மற்றும் விசேச வைபவங்களில் இப்பகுதி ஏழைகளுக்கு புத்தாடை மற்றும் உணவுகளை வழங்கி சந்தோசம் அடையும் முஸ்லிம் தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதையும் இப்பகுதி மக்கள் நன்கறிவர்.

எனினும் நம்மை நாட்டைவிட்டே அப்புறப்படுத்தும் நோக்கில், அண்ணன் - தம்பிகளாய் பழகிவரும் தலித் சகோதரர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாள வேண்டும் என்ற தீய எண்ணத்தில் மதவாத சக்திகளுடன் கைகோர்த்து இப்பகுதி இளைஞர்கள் சிலரே இவ்வழக்கை நடத்தி வருகிறார்கள்.

இந்த மதவாதச் சக்திகளைப் பொருத்தவரை காலணியைச் சார்ந்த இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராக கொம்புசீவிட்டு, மேலும் பகைவளர்த்து குளிர்காய்ந்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற பகடைக்காயாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நடுநிலை இந்து சகோதரர்களும் உணர்ந்துள்ளார்கள்.


இவ்வழக்கை நடத்தி வரும் காலணியைச் சேந்த M.சுப்பிரமணியம் (இறந்தவரின் மகனல்ல) மற்றும் சிலர், அதிரையில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு டைல்ஸ் மற்றும் மார்பில் கற்களைப் பதிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். நம்மவர்களின் பணத்தை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு நம்மூர் இளைஞர்கள்மீது வழக்கு நடத்தி வருவர் சுகமாக வாழ வகைசெய்துள்ள முஸ்லிம்களின் செயலை ஞாபக மறதி என்பதா அல்லது சமுதாய அக்கரையின்மை, சமூகத்தின்மீதான பாராமுகம் என்பதா சகோதரர்களே?


அல்லாஹ் காபக்கட்டும்! நீங்களோ அல்லது நம்வீட்டுப் பிள்ளையோ இவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தாலும் இதுபோல் பாராமுகமாக இருப்பீர்களா என்று சிந்தியுங்கள். அல்லாஹ்விற்காக ஒன்றுபடாத எந்த சமுதாயமும் வெற்றியடைந்ததாக சரித்திரமில்லை. தங்களை மாற்றிக்கொள்ளாத சமூகத்தை அல்லாஹ்வும் கண்டுகொள்ள மாட்டான் என்பது நம் மார்க்கத்தின் எச்சரிக்கை.

இன்னும் எத்தனை காலம் இப்படி அப்பாவிகளையும், பெண்களையும் பாதுகாப்பற்ற நிலையில் ஊரில் விட்டுவிட்டு உலகம் சுற்றி பொருள் தேடப்போகிறோம்.? இவ்வழக்குகளில் சிக்கித்தவிக்கும் நமதூர் முஸ்லிம்களுக்கு சட்ட உதவி செய்யப் போவது யார்? அபலைகளை பொய் வழக்குகளிலிருந்து விடுவிக்க,ஏற்கனவே உதவிக் கொண்டு இருப்பவர்களுடன் நாமும் இணைந்து தேவையான நிதியுதவிகளை செய்யலாமே!

நமதுர் தேசிய வங்கிகளில் ஆண்டுகளாக அடைந்து கிடக்கும் உங்கள் சேமிப்புகளிலிருந்தும்,ஜகாத் நிதியிலிருந்தும் உதவி வழங்கினால் அவர்களும் நம்மைப்போல் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க முடியும் சகோதரர்களே!

சிந்திப்போம்! செயல்படுவோம்! ஒன்றுபட்டால் இன்ஷா அல்லாஹ் உண்டு வாழ்வு!
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: