சூடானில் கலவரம்:41 பேர் படுகொலை

கார்தூம்:சூடானில் தார்ஃபூர் பிரதேசத்தில் இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையேயான மோதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மிசிரியா,ரிஸெகட் ஆகிய பழங்குடியினர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது.ரிஸெகட் பழங்குடியினர் மிசிரியா பழங்குடியினரைத் தாக்கினர் என மிசிரியா பழங்குடியினர் தலைவர் இஸ்ஸத்தீன் மூஸா மண்டில் கூறினர்.


அரசு தலையிட்டு பழங்குடியினர் இடையேயான கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மண்டில் வலியுறுத்தினார்.

தற்பொழுதும் அங்கு கலவரம் தொடர்வதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என செய்திகள் கூறுகின்றன.

இப்பகுதியில் இதைப்போல் கடந்த மார்ச் மாதம் நடந்த கலவரத்தில் 100 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: