
கொழும்பு: கொழும்பு நகரில் இன்று காலை குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
பேட்டா என்ற இடத்தல் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் ஆப்பிள் கடைக்கு அருகே இன்று காலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ராணுவ வீரர் ஒருவர் கையில் வைத்திருந்த கிரனைட் குண்டு தவறுதலாக வெடித்ததாக போலீசார் கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் புலிகளுக்கு தொடர்பில்லை என்று ராணுவம் கூறியுள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment