இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை


கெய்ரோ: இதற்கு முன்பு அமெரிக்கர்கள் சந்தித்த தாக்குதலை விட மிக பலத்த தாக்குதலை விரைவில் நடத்துவோம் என அல் கொய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் கடாஹன் எச்சரித்துள்ளார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் விடுத்துள்ள 24 நிமிட வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது...

மாசசூசஸ்ட்ஸ் செனட் தேர்தலில் நீங்கள் (ஒபாமா) தோல்வியைச் சந்தித்துள்ளீர்கள். இதற்கு முன்பு நாங்கள் நடத்திய தாக்குதலை விட மிகக் கடுமையான தாக்குதலை விரைவில் உங்களது நாடு சந்திக்கும்.

நீங்கள் இதுவரை கொன்றுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கையுடன், நாங்கள் நடத்திய தாக்குதலில் பலியான அமெரிக்கர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் நடத்திய வேண்டிய தாக்குதல்கள் இன்னும் நிறைய உள்ளது என்பது தெளிவாகத் தெரியும். அதைச் சந்திக்கத் தயாராக இருங்கள். இனி நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்பு நடத்தியதை விட மிகக் கடுமையானதாக இருக்கும். இதற்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட அதிக அளவிலான அமெரிக்கர்கள் அதில் உயிரிழப்பார்கள்.

அந்த நேரம் வரும் வரை நாங்கள் பொறுத்திருக்கப் போகிறோம். அதனால்தான் தற்போது அமைதியாக இருக்கிறோம், கட்டுப்பாடு காக்கிறோம். ஒரு வேளை இந்தப் போராட்டத்தில் அல் கொய்தா தோற்றாலும் கூட கோடானு கோடி முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவார்கள்.
Read: In English
அதிபர் ஒபாமா தனது பெயரில் முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக விஷப் பாம்பு போல செயல்படுகிறார். உங்களுக்கு முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ஒபாமாவாக இப்போது நீங்கள் இல்லை.

எங்களுடன் நீங்கள் சமரசமாக போக வேண்டும் என்று விரும்பினால் இஸ்ரேலுடனான உறவை முற்றிலும் வெட்டி விட வேண்டும். ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் எச்சரித்துள்ளார் கடாஹன்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: