துருக்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை

இஸ்தான்புல்:துருக்கி நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.

துருக்கி நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடி ஆகும். அவர்களில் 3 கோடிப் பேர் இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆபாச இணையதளங்கள் அதிகமாக இருப்பதால்,அப்படிப்பட்ட இணையதளங்களுக்கு முஸ்லிம் நாடான துருக்கி தடை விதித்து உள்ளது. இது தவிர இணையதள தணிக்கை முறையையும் அது கடைப்பிடித்து வருகிறது.

இணையதள தணிக்கை முறைக்கு இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் தணிக்கை முறையை எதிர்த்து இஸ்தான்புல் நகரில் பேரணி நடத்தினார்கள்.அவர்கள் இணையதளப்பக்கங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரினார்கள்.

இணையதள தடைக்குக் காரணமான போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக பேரணியில் குரல் எழுப்பப்பட்டது.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பிலிகி பல்கலைக்கழகமும் கலந்து கொண்டது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: