அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான தொடர்பை நோக்கித் தீவிரமடையும் சி.பி.ஐ. விசாரணை


அஹமதாபாத்:கடந்த அக்டோபர் 2007ல் நடந்த அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளான வர்ஷ்னே மற்றும் அசோக் பேர்ரி ஆகியோரும் இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளான்.

தர்காவில் குண்டுகள் வைக்கும் போது, இவர்கள் இருவர் தான் குப்தாவிற்கு தங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். சிதாபூர் என்ற இடத்தில் தனக்கு இவர்கள் இருவரும் தங்க ஏற்பாடுகள் செய்தாக குப்தா தெரிவித்துள்ளான்.

முன்னதாக,கல்சங்கரா மற்றும் சுவாமி அசீமானாந்தா ஆகியோர் இவ்வழக்கில் தேடப்பட்டுவரும் தலைமறைவான தீவிரவாதிகள் ஆவர்.

இக்குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

'விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போதைக்கு எதுவும் கூற இயலாது, மிக விரைவில் சில கைதுகள் மேற்கொள்ளப்படலாம், ஆனால் யார் யார் என்பதை இப்போது கூற முடியாது.' என்று சி.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: