தீவிரவாத தாக்குதலுக்காக சிம் கார்டுகள் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்கள்- சிபிஐ தகவல்


அஜ்மீர்,மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டுகளில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவனான அசோக் வர்ஷினியின் கைரேகை என்பது சிபிஐ அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அஜ்மீர் குண்டுவெடிப்புக்காக அசோக் வர்ஷினி தேவேந்திர குப்தாவிடம் 2 சிம்கார்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சிம்கார்டுகளே 17 பேர் உயிரிழக்க காரணமாயிருந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குப்தாவை அஜ்மீர் வழக்கில் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளது. மஹாராஷ்டிரா,உத்திர பிரதேசம், ராஜஸ்தானை சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிபிஐ ஆகியவை அசோக் வர்ஷினி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் மத்திய கமிட்டி உறுப்பினர் அசோக் பெர்ரியை பல முறை விசாரித்துள்ளன.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் இருந்து 9 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.ஆனால் இதில் எத்தனை சிம்கார்டுகள் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.

"ஹைதராபாத் மற்றும் அஜ்மீர் இரண்டு இடங்களிலும் மொபைல் போன் மூலமே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.மேலும் இந்த இரண்டு குண்டுவெடிப்புக்கும் ஒற்றுமை உள்ளது" என சிபிஐ தலைவர் அஷ்வானி குமார் கூறியுள்ளார்.

வர்ஷினி சிம்கார்டுகளை தான் வாங்கவில்லை என்று மறுத்த போதிலும் குப்தாவுடனான தொடர்பை இவரும் பெர்ரியும் மறுக்கவில்லை.

குப்தா கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களால் பாதுகாப்பாக சீதாபூரில் தங்கவைக்கப்பட்டுள்ளான்.

சிபிஐ. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விசாரித்தது. வர்ஷினி மற்றும் பெர்ரியுடனான தொடர்பை ஆர்.எஸ்.எஸ். ஆல் மறுக்க முடியவில்லை ஏனெனில் பெர்ரி உத்திரபிரதேச மண்டல் பொறுப்பாளராக இருக்கிறார், வர்ஷினி ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளராக இருக்கிறார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: