பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மனித குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு பகுதியில் உள்ள யாககுந்த் என்ற கிராமத்தில் உள்ள முக்கியமான அரசு அலுவகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சக்தி வாய்ந்த குண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி அரசு அலுவலகம் முன்பகுதியில் மோதி வெடித்துச் சிதறினார். இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மக்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் முக்கியமான சந்தையும், அரசு அலுவலகங்களும் உள்ளன. இத்தாக்குதலில் கடைகள் சில இடிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஷாவரில் உள்ள அரசு மருத்துவமனையில் மட்டும் காயமடைந்த நிலையில் 54 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ரஹீம் அப்ரிதி தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: