சர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்


நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முஹம்மது பாரூக். இவர் செசல்ஸ் தீவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளராக உள்ளார். இவரின் மகள் சகோதரி சல்மா செசல்ஸ் தீவில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். சர்வதேச அளவில் 100 நாடுகளை சேர்ந்த 2,000 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற “இண்டர்நேசனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜிகேசன்ஸ்” என்ற தேர்வு கடந்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனுடைய சர்வதேச முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் கலந்துக்கொண்ட சகோதரி சல்மா சர்வதேச அளவில் மூன்று பாடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.


ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் சல்மா ஃபாரூக் சர்வதேச அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும் உயிரியல் பாடத்தில் மூன்றாம் இடத்தையும், புவியியல் பாடத்தில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார். இன்பர்மேசன் கம்யூனிகேசன் மற்றும் புவியியல் பாடங்களில் செசல்ஸ் தீவில் சிறப்பிடத்தையும், இயற்பியல் பாடத்தில் அதீத சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார். பத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளதால் இவருக்கு “ஏ ஸ்டார் (A-Star)” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

அப்துல் பாஸித் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள். பிற தளங்களில் இருந்து பதிவை பாதிப்பதாக இருந்தால் அதனுடைய சுட்டியையும்(link) இணைக்கவும்.
ஒரிஜினல் பதிவு <a href="http://nidurneivasal.blogspot.com/2010/07/blog-post_07.html>இங்கே உள்ளது.</a>