அடுத்தடுத்து ஈரான் ஏவுகணைச் சோதனை-இஸ்ரேலுக்கு குறி?






வாஷிங்டன்: நேற்று ஏவுகணைச் சோதனை நடத்திய ஈரான் இன்று 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி சோதனை நடத்தியுள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஈரானின் ஏவுகணைச் சோதனகளை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த சோதனைகள் மூலம் அமெரிக்க நகரங்களையும், இஸ்ரேலையும் தாக்கும் வல்லமை தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நீர் வழிப் பாதையில்தான் உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது)

ஈரானின் இந்த அடுத்தடுத்த சோதனைகளால் கச்சா எண்ணையின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

ஏவுகணைச் சோதனை குறித்து ஈரான் விமானப்படை தலைமை கமாண்டரான ஜெனரல் ஹூசேன் சலாமி கூறுகையில், எதிரிகளுக்கு எதிரான எங்களது வல்லமையைக் காட்டும் சோதனை இது. சமீபகாலமாக எங்களது எதிரிகள் ஈரானை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு இது பதிலடி.

எங்களை யாரேனும் தாக்கினால், எண்ணைக் குழாய்கள் செல்லும் நீர் வழிப் பாதையை மூடி விடுவோம். பதிலுக்குத் தாக்கும் திறமையும் எங்களுக்கு உள்ளது.

எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர்.

எங்களது விரல்கள் டிரிக்கரில்தான் எப்போதும் உள்ளன. எந்த சமயத்திலும் தாக்கக்கூடிய வகையில் ஏவுகணகைளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என்றார்.

இன்று நடந்த ஏவுகணைச் சோதனையில் மொத்தம் 9 ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளன. அனைத்துமே நீண்ட தூர மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் ஆகும்.

இதில் சஹாப்-3 ரக ஏவுகணை, 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இதில் 1 டன் வெடிபொருளை பொருத்தி அனுப்பலாம்.

இதன் மூலம் இஸ்ரேல், துருக்கி, அரேபிய வளைகுடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

அமெரிக்கா கடும் கண்டனம்:

ஈரானின் ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றன.

இனிமேலும் சோதனை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் நடந்து கொள்வதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட்கேட்ஸும் எச்சரித்துள்ளார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: