தாஜ்மஹாலை குறிவைக்கும் 'சங்' பயங்கரவாதிகள்


உலக அதிசயங்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் தாஜ்மஹாலை, பாபரி மஸ்ஜித் பாணியில் அபகரிக்க இந்துத்துவ பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி யுள்ளனர். இது அவர்களின் நெடுங்கால சதித்திட்டமும் கூட. பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் காசி, மதுரா பள்ளிவாசல்களின் இடத்தில் கிருஷ்ணன் கோவில் இருந்ததாகவும், புளுகித் திரியும் இந்தப் போக்கிரிக் கும்பல், தாஜ்மஹால் இடத்தில் சிவன் கோவில் இருந்ததாகக் கண்டுபிடித துள்ளது (?)

தேஜோ மஹால் என்ற சிவன் கோவிலைத்தான் ஷாஜஹான் தாஜ் மஹால் என்று மாற்றிவிட்டதாகவும், தாஜ்மஹாலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த பயங்கர வாதிகள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் 24.07.2008 வியாழன் அன்று 12 பேர் கொண்ட சிவசேனா பயங்கரக் கும்பல் புகுந்து, தாஜ்மஹாலில் 'ஆர்த்தி' என்னும் பூஜை நடத்த முயன்றுள்ளனர்.

தாஜ்மஹாலுக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்ய முயன்றோரை காவல்துறையினர் தடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சிவசேனாவின் ஆக்ரா தலைவர் விணுவால் வானியா, இது குறித்து கூறும் போது, 'தாஜ்மஹால், இதற்கு முன் தேஜோ மஹால் என்ற பெயரில் இருந்த சிவன் கோவில்தான். இது மதுரா கோவில் அறக்கட்டளையின் கீழுள்ள ரங்ஜி கோவிலுக்கு சொந்தமானது. எனவே, எங்கள் தொண்டர்கள் அதை மீட்க முயல்வதில் என்ன தவறு உள்ளது? என்று உளறியுள்ளார்.

பாபரி மஸ்ஜிதை அபகரிக்கச் சென்றவர்கள், முதலில் ஆயுதங்களோடு செல்லவில்லை. பள்ளிவாசலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து சிலைகளை வைத்தனர். பின்னர் மஸ்ஜிதே பறி போனது.

பாபரி மஸ்ஜிதைத் தகர்த்த பயங்கர வாதிகள் 'காசி மதுரா பாக்கி ஹை' என்று கோஷமிட்டனர்.

காசி, மதுரா பள்ளிவாசல்களையும் இடிப்போம் என்பது இதன் பொருள்.
அவர்களின் அபரிக்க வேண்டிய பள்ளிவாசல்கள், வரலாற்றுச் சின்னங் களின் பட்டியலில், தாஜ்மஹாலும் இருக்கிறது.

தாஜ்மஹாலுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு, மிகவும் கவலைக்கிடமானது என்பதை அங்கு சென்று வந்தவர்கள் அறிவர்.

உத்தரப்பிரதேச வக்ப் வாரியம் தாஜ்மஹாலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தாஜ்மஹாலை தனது பொறுப்பில் வைத்துள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை, தாஜ்மஹாலை 'இல் பொருள் ஆக்கிவிடாமல், அதனை உடனடியாக வக்ப் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தாஜ்மஹாலை அபகரிக்க முயலும் சங்பரிவார பயங்கர வாதிகளுக்கு எதிராக, உறுதிமிகு நடவடிக் கைகள் இதுவரை அரசு மேற்கொள்ளா தது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது. இப்போதே அரசாங்கம் விழித்துக் கொண்டால், எதிர்கால விபரீதங்கள் தடுக்கப்படலாம்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: