கோவா குண்டு வெடிப்பு

கோவா குண்டு வெடிப்பில் பிரக்யாசிங் தாகூரின் அமைப்புக்கு தொடர்பு

17.10.2009

நேற்று கோவா மாநிலத்தின் மர்கோவா மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் கோவா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிருவரும் கடுமையான எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கோவா காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு இந்து தீவிரவாத அமைப்பு என்பதும் முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண்சாமியார் பிரக்யாசிங் தாகூர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சிறுபான்மை கிருத்தவர்கள் அதிகம் வசிக்கும் கோவாவில் நிகழ்த்தப்பட்டுள்ளதால் கிருத்தவர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

பல குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருக்கும் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப்பு உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும், காங்கிரஸ் அரசு செய்யுமா? அல்லது வழக்கம் போல அவர்களுக்கு சாமரம் வீசுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: