
மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்ப அங்கத்தவர்கள் சென்று கைதியைச் சந்திப்பது, கைதி தன் வழக்கறிஞரைச் சந்திப்பது முதலான அனைத்தையும் தடுத்துள்ளதன் மூலம் வெளி உலகத்துடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளவே முடியாமல் இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தமது மகளைத் துன்புறுத்துவதாக அப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பெய்ட் ஹனூன் கடவையருகில் வைத்து 2005 ஜூன் மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட வஃபா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட்டினால் 12 ஆண்டுகள்- 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது தண்டனைக் காலத்தில் நான்கரை ஆண்டுகளைத் தற்போது அவர் நிறைவு செய்துள்ளார்.
நன்றி: PIC
0 comments:
Post a Comment