சதாம் உசேன் ஆதரவாளர்கள் டிவி தொடங்கினர்

சதாம் உசேன் ஆதரவாளர்கள் டிவி தொடங்கினர்

பாக்தாத்: அமெரிக்காவால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் பாத் கட்சியினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் சேர்ந்து சதாம் உசேன் புகழ் பரப்ப புதிய டிவியைத் தொடங்கியுள்ளனர்.

பாத் கட்சி ஈராக்கில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் சதாம் ஆதரவாளர்கள் இணைந்து சதாமின் புகழைப் பரப்ப டிவி ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

இந்த டிவியில் சதாம் உசேனின் வாழ்க்கை வரலாறும், அவரது பேச்சுகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

சதாம் உசேன் உள்ளிட்ட பாத் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு எதிரான அவதூறுகளுக்குப் பதிலடி தரவும், சதாம் உசேன் குறித்து மக்களிடையே நல்லெண்ண செய்தியை பரப்பவும் இந்த டிவி தொடங்கப்பட்டுள்ளதாம்.

டிவிக்கு அல் அரபி என்று பெயரிட்டுள்ளனர். முதலில் சதாம் உசேன் பெயரையே டிவிக்கு சூட்ட திட்டமிட்டிருந்தனர். ஆனால் பின்னர் அரசியல் நெருக்கடிகள் காரணமாக அல் அரபி என வைத்துள்னர்.

சதாம் புகழ் பரப்பும் டிவி தொடங்கப்பட்டுள்ளதை ஈராக் முன்னாள் துணை அதிபர் இஸ்ஸாத் இப்ராகிம் அல் டோரி பாராட்டியுள்ளார். பாத் கட்சியினருக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இந்த டிவி மிகவும் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

புதிய டிவி குறித்து ஈராக் அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: