விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர் : தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 1990 ஜன., 1 முதல் 1994 பிப்., 28 க்குள் பிறந்த திருமணமாகாத இளைஞர்களுக்கு விமானப்படையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2010 ல் நடக்கும் தேர்வு மூலம் குரூப் "ஓய்' நான்டெக்னிக்கல் பிரிவுகளில் படை வீரராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. பிளஸ் 2, இன்டர்மீடியட் படிப்பில் அறிவியல், கலை, வணிகவியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் டிப்ளமோ ஏதாவது ஒரு பிரிவில் 50 சத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். "சென்ட்ரல் ஏர்மேன் செலக்ஷன் சென்டர்,' தபால் பெட்டி எண் 11807, புதுடில்லி -110 010, என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை ஜூன் 10 ம் தேதிக்குள் கிடைக்குமாறு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.indianairforce. nic.in இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 8, ஏர்மென் செல்க்ஷன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன், தாம்பரம், சென்னை -600 046, போன் 044 227 918 53 , 223 965 65 begin_of_the_ skype_highlighti ng 223 965 65 end_of_the_skype_ highlighting எக்ஸ்டன்ஷன் 7808 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: