1984, டிசம்பர் 2 நள்ளிரவு, டிச.3 அதிகாலை:
யூனியன் கார்பைடு இந்தியா ஆலையிலிருந்து நச்சுவாயு மீதைல் ஐசோசயனைடு வெளியேறல். 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு; 5 லட்சம் பேர் பாதிப்பு.
டிசம்பர் 4: நிறுவனத் தலைவர் வாரென் ஆண்டர்சன் உள்ளிட்ட 9 பேர் கைது. ஆனால் 2,000 டாலர் ஜாமீன் தொகை கட்டி, மீண்டும் இந்தியா வருவதாகக் கூறி அமெரிக்கா சென்றார் வாரென் ஆண்டர்சன், ஆனால் அவர் வரவேயில்லை. 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு நிறுவனம் சேர்ப்பு.

1984-ல் போபாலில் விஷவாயுக் கசிவால் பார்வை இழந்து மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்படும் சிறுவர்கள். (பைல் படம்).
1985, பிப்ரவரி: அமெரிக்க நீதிமன்றத்தில் 330 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு.
1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்தியாவுக்கு மாற்றல்.
1987, டிசம்பர்: வாரென் ஆண்டர்சன் மற்றும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு. பெருமளவு மக்கள் படுகொலைக்குக் காரணமானதற்காக ஆண்டர்சனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
1989, பிப்ரவரி: இந்திய அரசுடன் யூனியன்
கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச உடன்படிக்கை செய்தது. இதன்படி 43 கோடி டாலர் இழப்பீட்டை யூனியன் கார்பைடு அளித்தது.
1989, பிப்ரவரி-மார்ச்: மிகக் குறைவான இழப்பீட்டைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல்.
1992: இழப்பீட்டுத் தொகையான 43 கோடி டாலரில் பகுதியளவு போபால் மக்களுக்கு வழங்கப்பட்டது.
1992, பிப்ரவரி: நீதிமன்ற நோட்டீûஸ புறக்கணித்ததாக வாரென் ஆண்டர்சன் மீது குற்றச்சாட்டு.
1994, நவம்பர்: வாயுக் கசிவில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த போதிலும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குகளை கோல்கத்தாவைச் சேர்ந்த மெக்லாய்ட் ரஸ்ஸல் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு விற்க அனுமதி.
1996, செப்டம்பர்: இந்திய அதிகாரிகளுக்கெதிரான வழக்கின் தீவிரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்தது.
1999, ஆகஸ்ட்: யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டதாக அறிவிப்பு.
1999, நவம்பர்: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தொண்டு நிறுவனம் கிரீன் பீஸ் அமைப்பினர் இப்பகுதியில் நிலம் மற்றும் தண்ணீரை சோதித்ததில் பல்வேறு நச்சு ரசாயனப் பொருள் மற்றும் பாதரசத்தின் அளவு வழக்கத்தைவிட 60 லட்சம் மடங்கு அதிகம் இருப்பதாக சோதனையில் கண்டறிந்தனர்.
1999, நவம்பர்: விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்தோர்,யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் தலைவர் வாரென் ஆண்டர்சனுக்கு எதிராகவும் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் குற்ற வழக்குப் பதிவு.
2001, பிப்ரவரி: இந்தியாவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் நேர்ந்த வாயுக் கசிவுக்கு பொறுப்பேற்க அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகம் மறுப்பு.
2002, ஜனவரி: சிருஷ்டி என்ற அமைப்பு நடத்திய சோதனையில் இப்பகுதியில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் பாதரசம் மற்றும் காரீய அளவு அதிகமாக இருப்பதை சோதனை மூலம் கண்டறிந்தது.
2002, ஜூன்: வாரென் ஆண்டர்சனுக்கு எதிரான வழக்கை மத்திய அரசு கைவிடப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2002, ஆகஸ்ட்: வாரென் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே வாரென் ஆண்டர்சனைக் காணவில்லை என அமெரிக்கா தெரிவித்த நிலையில் அவர் நியூயார்க்கில் இருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
2002, அக்டோபர்: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை சுத்தப்படுத்த கடும் எதிர்ப்பு. அதில் மேலும் பல ஆயிரம் டன் நச்சுக் கழிவுகள் இருப்பதாக புகார்.
2003, மே: வாரென் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை.
2004, மார்ச்: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை இந்திய அரசு அனுமதித்தால் சுத்தப்படுத்தித் தரலாம் என்று டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
2004, ஜூன்: இந்திய அரசிடம் வாரென் ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு. இருதரப்பு ஒப்பந்தத்தில், குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்து ஒப்பந்தத்தில் சில பிரிவுகள் வாரென் ஆண்டர்சனை ஒப்படைப்தற்கான வரையறைக்குள் வரவில்லை என தெரிவித்தது.
2004, ஜூலை 19: ஏற்கெனவே ஒப்புக்கொண்ட 47 கோடி டாலர் இழப்பீட்டைத் தவிர ரூ. 15 கோடி கூடுதலாக தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. 1992-ம் ஆண்டிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்கிய 47 கோடி டாலரை வைத்தருந்ததற்கு வட்டியாக இத்தொகையை வழங்க உத்தரவு.
2004, அக்டோபர் 25: இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
2004, அக்டோபர் 26: யூனியன் கார்பைடு நிறுவனம் அளித்த 47 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையை நவம்பர் 15-க்குள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
2010, ஜூன் 7: வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு.
0 comments:
Post a Comment