புகைபிடிக்க சவூதி அரசு தடை விதித்துள்ளத்துள்ளது !


விமான நிலையங்களில் விமான நிலையங்களில் புகைபிடிக்க சவூதி அரசு தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் 60 லட்சம் பேர் புகைபழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், புகையிலை மற்றும் சிகரெட் நுகர்வில் சவூதி அரேபியா உலகிலேயே ஆறாவது இடத்தில் உள்ளது. 10 சதவீத பெண்கள் மற்றும் 19.3 சதவீத இளைஞர்கள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 1.3 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் அங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் 400 பேர் வரை இறப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த 2003ம் ஆண்டு அந்நாட்டு அரசு, கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இந்த கட்டுப்பாடுகளை புகைபிடிப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, பெருகி வரும் சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த சவூதி அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. விமான நிலையங்களில் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற 150 உறுப்பினர்களை கொண்ட ஷுரா கவுன்சிலின் பரிந்துரைக்கு, அந்நாட்டு இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு விமான போக்குவரத்து ஆணையம் அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: