போபால் விஷ வாயு வழக்கு தொடர்பாக தேடப்படும் குற்றாளியான ஆன்டர்சனை ஒப்படைப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக போபால் விஷ வாயு கசிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
போபால் விஷவாயு வழக்கு வெளி வந்தபோது இந்திய நீதித்துறை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் புயலை ஏற்படுத்தின.
வழக்கு முடியவே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி மேல்முறையீடு செய்தால் இதன்படி வெற்றியோ இழப்பீடோ கிடைக்கும்போது பாதிக்கப்பட்டோர் யாரும் உயிரோடு இருப்பார்களா என விரக்தியுடன் கேள்வி எழுப்பினார்.
போபால் விவகாரம் தொடர்பாக அமைச்சர் வீரப்ப மொய்லிக்கும் தான் கடிதம் எழுதிருப்பதாக அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
Source : Inneram
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment