காத்மாண்டு, ஜூலை 12: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இரண்டு பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட பத்து பேர் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
காஸ்கி மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகினர். இம்மாவட்டத்தில் மேலும் மூன்று குழந்தைகள் நிலச்சரிவினால் பலியாகினர். அதுபோல, நிலச்சரிவினால் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
சையாங்ஜா மாவட்டத்தில், ஒரு பெண்மனியும், அவரின் நான்கு வயது குழந்தையும், மண்ணோடு புதைந்து பலியாகினர்.
பாதுகாப்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment