ஈராக் முன்னாள் அதிபர் ஷஹீத் சதாம் ஹுசைனின் முக்கிய உளவாளியாக நம்பப்பட்ட ஈராக்கியர் ஒருவருக்கு குவைத் அரசு குடியுரிமை வழக்கியுள்ளது.எனினும்,அவர் பெயர் உட்பட மற்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
1990-ன் போது குவைத்திற்கான ஈராக்கிய போரில் இவர் முக்கிய பங்குவகித்தவராவர். சதாம் மாரிடர்ஸ் பிரிகட் என்ற அப்போதைய அரசின் உளவுப் பிரிவிற்கு இவர் தலைமை தாங்கியவர்.
குவைத்தில் தங்கியபடி சதாம் அரசிற்கு இவர் மற்றும் இவரின் குடும்பத்தினர் (தற்போதைய அமெரிக்க போர் மூளும் வரை) உளவாளிகளாக செயல்பட்டு வந்தனர்.
அவரின் பிழைகளை மன்னித்த குவைத் அரசு, அவரையும் சேர்த்து அவரின் குடும்பத்தினருக்கும் குவைத் குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
SOURCE : Siasat
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment