ஜித்தா:சில தினங்களுக்கு முன்பு லாகூர் சூபிகள் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 43 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை குறித்து Organization of Islamic Conference (ஒ.ஐ.சி) கருத்து தெரிவிக்கையில், இது போன்ற தாக்குதல் முஸ்லிம்களின் மத்தியில் உள்ள அமைதியை சீர்குலைப்பதற்காக நடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள ஒ.ஐ.சி.செயலாளர் இஹ்சநோக்ளு, இக்குற்றத்தை யார் செய்திருந்தாலும் அவர் இஸ்லாம் மற்றும் மனுதாபிமானத்துடைய எதிரிகள் என்றார்.
இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் எவர்கள் செயல் பட்டாலும், அவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதுவரை இக்குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
SOURCE : Siasat
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment