இந்தியக் கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா இலங்கைக்கு அலுவல் ரீதியிலான பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஐந்து நாள்கள் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இலங்கை செல்வது இதுவே முதல் முறை என கருதப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என இந்தியக் கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ் தீபகற்பத்திலுள்ள காங்கேசன் துறைமுகத்தைப் பார்வையிடவும் இந்தியக் கடற்படை தளபதி நிர்மல் வர்மா முடிவு செய்துள்ளார். காங்கேசன் துறைமுகத்தை இந்திய அரசு அண்மையில் சீரமைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment