ஆப்கான் மனித உரிமை கண்காணிப்பாளர் அறிக்கை
2001ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பின்னர் இந்த ஆண்டிலேயே ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் மனித உரிமை அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.
தாலிபான்களை தோற் கடிப்பதென்பது அமெரிக்காவுக்கு மிகவும் கடினமான பணியாக அமைந்துள்ள அதேவேளை அதிகரித்துச் செல்லும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக ஆப்கான் மனித உரிமை கண்கானிப்பாளர் அமைப்பு தெரிவிக்கின்றது.
பாதுகாப்புச் சம்பவங்களின் எண் ணிக்கை மாத்திரமன்றி கிளர்ச்சி மற்றும் எதிர்க்கிளர்ச்சி வன் முறைகளும் ஒன்றுபட்டு அதி கரித்துள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.
போர் சம்மந்தப்பட்ட சம்பவங்களில் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்ட 1059 பொது மக்க ளுடன் ஒப்பிடும் போது, 2010ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலங்களில் 1074 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1500 பேர் காயப்பட்டுள்ளனர் என இம் மனித உரிமை அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 30 ஆயிரம் மேலதிக அமெரிக்க துருப்புக்களை `தாலிபான்களை முறியடித்து ஒன்பது வருட கால யுத்தத்திற்கு முடிவை காணும் திட்டமென' அமெரிக்காவால் வர்ணிக்கப்பட்ட புதிய இராணுவத் திட்டத்தின் பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு கட்டளை யிட்டார். ஆனால் ஆப்கான் மனித உரிமை கண்காணிப்பாளர் அமைப்பின் இந்த மத்திய வருட அறிக்கை, தாலிபான் களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கான ஒபா மாவின் கொள்கை தாலிபான் களை முறியடிக்கவோ அல்லது துண்டாக்கவோ இல்லை எனத் தெரிவிக்கின்றது. மாறாக அந்நிய படைகளுக்கெதிரான தாலிபா ன்களின் போராட்டம் பலமடை ந்துள்ளதுடன் வகைப்படுத்தப் பட்டுமுள்ளது என இவ்வறிக்கை கூறுகின்றது. 1200 வன்முறைச் சம்பவங்கள் ஜூன் மாதம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டின் பின்னரான எந்தவொரு மாதத்துடனும் ஒப்பிடும் போது இதுவே உயர்ந்த எண்ணிக்கையான சம்பவமாகும்.
இதேவேளை இவ்வறிக்கையின் படி, அமெரிக்காவும் நேட்டோவும் இணைந்து 140,000 இற்கும் மேற் பட்ட துருப்புக்களை ஆப்கானில் நிலைகொள்ளச் செய் துள்ளன. மேலும் 10,000 துருப் புக்கள் எதிர்க் கிளர்ச்சி திட்டத்தின் பகுதியாக ஆப்கானுக்கு அனுப்பப்பட வுள்ளனர். மேலும் தாலிபான்களின் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் பொது மக்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது சம்பவமாக அமைந் துள்ளதாக இவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment