காஸா நிவாரணக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதை ஏற்கிறது இஸ்ரேல்

காஸா கரையோரப் பகுதியில் நிவாரணக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தவறுகள் இழைக் கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் கவனயீனமே இந்தத் தாக்கு தல்களுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேல் இவ்வதிகாரிகள் மீது எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

இஸ்ரேல், காஸா நிவாரணக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி யதனால் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கெதிராக கடும் கண்டனங்கள் வெளி யிடப்பட்டிருந்தமை குறிப்பி டத்தக்கதாகும்.

நிவாரணக் கப்பல் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத் துமாறு நியமிக்கப்பட்ட குழுவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. நிவாரணக் கப்பல்கள் தொடர் பில் வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கலாம் எனவும், இராணுவ உயரதிகாரிகள் தூர நோக்கமின்றி செயற்பட் டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் துருக்கி நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேலிய இராணு வத்தினர் நடத்திய தாக்கு தல்களில் 9 பேர் கொல் லப்பட்டனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் போதியளவு புலனாய்வு தொடர்பாடல் காணப்படாமையே துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கு பிரதான காரணம் எனக் குறிப்பிடப் படுகின்றது. தீர்மானம் நிறைவேற்றல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் தொழில்சார் ஒழுக்க விதிகள் பின் பற்றப்படவில்லை என விசார ணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: