
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள 26 ஏழை நாடுகளைவிட இந்தியாவின் 8 மாநிலங்கள் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎன்டிபி(UNDP) முயற்சியுடன், வறுமையை அளவிடும் எம்பிஐ (Multidimensional Poverty Index - MPI) எனப்படும் முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை( 410 மில்லியன்) விட, இந்தியாவின் பீகார்,சட்டீஸ்கர்,ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம்,ஒரிஸ்ஸா,ராஜ்ஸ்தான்,உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள (421 மில்லியன்) மக்கள் மிக அதிக வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment