முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா அறிக்கை
ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் பாரபட்சமானது பாரிய அளவில் உயர்ந்த வண்ணமுள்ளது. இதற்கு பிரதான காரணம் உலகம் பூராவும் நிலவும் முரண்பாட்டு சூழ்நிலையாகும் என உலகளாவிய ரீதியில் நிலவும் மனித உரிமை மீறல் நிலைமைகளை கண்டறியும் மனித உரிமை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
வெறுப்பின் பேரில் இழை க்கப்படும் குற்றங்கள் உள்ளடங்களாக ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கெதிராக இழை க்கப்படும் பாரபட்சங்கள் அதிகரித்துச்செல்வதை எம்மால் காணமுடிகிறது என மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் போது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்குமான துணை அரசுச் செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்தார்.
இவ் அறிக்கை 2009ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கெதிராக மேற் கொள்ளப்பட்ட பல்வேறு பாரபட்சமான சம்பவங்களை சுட்டி க்காட்டுகின்றது. குறிப்பாக, மஸ்ஜி த்களில் மினாரத் அமைப்பதை தடை செய்து சுவிட்ஸர்லாந்தில் அண்மை யில் கொண்டுவரப்பட்ட அரசியல மைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வறிக்கை சுட்டி க்காட்டுகின்றது.
அவுஸ்திரேலியாவில் முஸ்லிம் களுக்கெதிராக மிதமிஞ்சிய பொலிஸ் பலப்பிரயோகம் மற்றும் தேர்தல் பிரசாரங்களில் முஸ்லிம் களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்புக் குரல்கள் என்பவற்றை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
மேலும் முஸ்லிம் நிறுவனங்கள் தமது சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் உரிமையை மறுத்தல் மற்றும் முகத்திரை அணிந்து பாடசாலைகளில் வேலை செய்யும் முஸ்லிம் பெண்களுக்கெதிரான நீதிமன்ற தீர்ப்பு போன்றவற்றை இவ் வறிக்கை ஜேர்மனி தொடர்பில் பாரபட்சமான சூழ்நிலையாக இனங்காண்கின்றது.
முக்கியமாக, தனது இரண்டு நெரு ங்கிய உறவு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பவற்றை அவற்றிலுள்ள முஸ்லிம் சிறுபான் மையினர் தொடர்பிலான மனித உரிமை பதிவுகள் குறித்து அமெரிக்கா இவ்வறிக்கையில் விமர்சிக்கின்றது.
ஐரேப்பாவின் மிகப்பெரும் முஸ்லிம் சிறுபான்மையினைக் கொ ண்ட பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கெதிரான தடையினை இவ்வறிக்கை பாரபட்சமாகக் குறிப்பிட்டுக்காட்டுகின்றது.
தனிநபர்களுக்கும் சொத் துக்களுக்கும் எதிராக எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் பிரிட் டனில் மேற்கொள்ளப்படுவதோடு முஸ்லிம்களுக்கெதிரான செய்தி களை தாங்கிய பொது ஒன்று கூடல்களும் பேரணிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
அத்துடன் இவை தனிநபர்களின் ஒருமைப்பாட்டுக்கெதிரான மீறல் களாக அமைந்துள்ளதாகவும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
2009ஆம் ஆண்டு இன, மத பதற்ற நிலையால் தூண்டப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் முஸ்லிம் களுக்கெதிராக இழைக்கப்பட்ட ஆண்டு என குறிப்பிடும் இப்பரந்த அறிக்கை சித்திரவதை மற்றும் நீதி முறையற்ற கொலைகள் தொடர் பிலும் பல்வேறு சம்பவங்கள் முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது.
மேலும் சீன அரசாங்கம் உய்கர் முஸ்லிம் சிறுபான்மையின ருக்கெதிராக பல்வேறு வழிகளில், குறிப்பாக கலாசார மற்றும் சமய ரீதியில் ஒடுக்கு முறைகளை மேற் கொள்வதாக இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
இவ்வாறு பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகளை சுட்டிக்காட்டி அமெரிக்கா அறிக்கை தயாரித்துள்ள போதிலும் தனது நாட் டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இவ் வருடாந்த அறிக்கை எதனையும் குறிப்பிடவில்லை. தமது நாட்டில் மட்டுமன்றி அமெரிக்கா முஸ்லிம்களுக்கெதிராக உலகம் பூராவும் வன்முறை இழைத் துவருவதுடன் வன்முறைகளை கட்டவிழ்த்தும் தூண்டியும் அவ்வாறான செயல்களுக்கு உதவி யளித்தும் வருவது முஸ்லிம் உலகம் அறிந்த உண்மையாகும். கியூபாவில் உள்ள குவாண்டனாமோ சித்திரவதைக்கூடத்தை அமெரிக்கா இன்று வரை மூடவில்லை. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாலிபா களுக்கெதிராக அமெரிக்கா தொட ர்ந்து மேற்கொண்டுவரும் வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் அப்பாவிப்பொது மக்கள் கொல்ல ப்பட்டுவருகின்றனர்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் பின் புலத்தில் நின்று அமெரிக்கா பாகிஸ் தானில் இடம்பெறும் ஒட்டுமொத்த வன்முறை சூழ்நிலைகளுக்கு சூத்திர தாரியாக அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு முஸ்லிம் நாடுகளில் ஏற் பட்டுள்ள வன்முறை மற்றும் யுத்த சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமான அமெரிக்கா முஸ்லிம் களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசுவதென்பது வேடிக்கையே.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 comments:
read
ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்
========
Post a Comment